Friday, December 30, 2011

(பகுதி-3)அன்பைத் தேடும் இதயம்

கலியாண வீடு கலகலப்பாக இருந்தது. காயத்திரி மனதில் கோகுலன் மேல் காதல் அரும்பியிருந்தது ஆனால் அதை சொல்லாமா வேண்டாமா என்று பலவாறு யோசித்து கொண்டு இருந்தாள்.பார்த்த இரண்டு நாளில் காதல் என்றால் ஏற்றுக்கொள்வானா என்ற சந்தேகம்.அவனிடம் காதலை சொல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள்.

Wednesday, December 28, 2011

இந்த வருடம்,சினிமா,பதிவுலகம்,கிரிக்கெட்,என்னை கவர்ந்தவை

2011 வருடம் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கின்றன.புதிய வருடம் 2012 வரவேற்க நாம் தயாராகிக்கொண்டு இருக்கின்றோம் இந்த 2011 ம் ஆண்டில்  எனக்கு மிகவும் பிடித்த சினிமா,கிரிக்கெட்,பதிவுலகம்,போன்றவற்றில் என்னை கவர்ந்த மனதை பாதித்த விடயங்களை இந்த பதிவின் மூலம் அலசுவோம்.

Monday, December 26, 2011

(பகுதி-2)அன்பைத் தேடும் இதயம்

கடந்த பதிவில்

அந்த பெயரைக்கேட்டதும் காயத்திரி ஒரு கணம் திகைத்துப் போனாள் கோகுலனா இவன் நம்பவே முடியவில்லை அதுதான் எங்கோ பார்தது போல இருந்தது ஏன் இவன் என்னை தெரிந்தது போல காட்டிக்கொள்ளவில்லை.ஒரு வேளை மறந்திட்டானா இல்லை அப்படி இருக்காது மறந்து இருக்க மாட்டான்.என்று பலவாறு எண்ணிக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள்.

முன்பு யார் அவன் என்று தெரியாமல் அவஸ்தை இருந்தது இப்ப அவன் யார் என்று ஓரளவு அறிந்த பின்னும் அவஸ்தை இருந்தது. அவனா இல்லை வேறு யாருமா ஏன் கோகுலன் என்று ஒருவனுக்குத்தான் பெயர் இருகனுமா என்று நினைத்தாள்.அப்பறம் இல்லை இவனை பார்த்த ஞாபகம் இருக்கு பெயரும் கோகுலன் என்று சொல்கின்றான் அப்ப அவன்தான் இவன்.
நாளைக்கு எப்படியும் அவனுடன் கொஞ்சம் பேச வேண்டும் இவன் அந்தக் கோகுலனா என்று கேட்க வேண்டும். என்று நினைத்துக்கொண்டாள்.

இனி..........

அன்று இரவு காயத்திரியின் தூக்கம் பறி போனது.நேற்றைவிட இன்று அவன் முகம் அதிகமாக தொல்லை படுத்தியது இவன் தான் அந்த கோகுலன் என்று முடிவுக்கு வந்தாள். எப்படியும் இன்று அவனிடம் கொஞ்ச நேரம் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். அவள் வழமையாக படிக்கும் அவளின் அபிமான பதிவர் ”வன்னி”யின் பதிவுகளை கூட படிக்கவில்லை அவள் மனம் அலைபாய்ந்தது.காலையில் சீக்கிரம் எழுந்து தன் வீட்டு வாசலில் காத்து இருந்தாள்.

Friday, December 23, 2011

அன்பைத் தேடும் இதயம்-(பகுதி-1)

காயத்திரியின் மனதில் அவன் உருவம் மீண்டும் மீண்டும் வந்து சஞ்சலப்படுத்திக்கொண்டு இருந்தது.அவளுக்கு அவனை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ஆனால் எங்க என்று ஞாபகம் வரவில்லை ஏன் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான் இன்றும் பார்ப்பானா?யார் அவன்? பல கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். 

Thursday, December 22, 2011

அன்பைத் தேடும் இதயம் புதிய தொடர் அறிமுகம்

வணக்கம் நண்பர்களே உங்கள் நண்பர்கள் தளத்தில் நாளை முதல் அன்பைத் தேடும் இதயம் என்ற ஒரு புதிய தொடர் ஆரம்பமாக இருக்கின்றது.இந்த தொடர் பற்றிய ஒரு அறிமுகம்.

Wednesday, December 21, 2011

கங்குலி பாடிய தமிழ் பாடல்கள்

குட்டிச்சுவர்க்கம் வலைப்பதிவின் ஓனர் ஆமினா அக்கா ஒரு தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருந்தார் அதன் தலைப்பு நீயின்றி நானா?(தொடர்பதிவு) அதாவது இதில் ஒரு கதை எழுதி அதுக்கு பொருத்தமான பாடல்களை சேர்கவேண்டும் இதுதான் அந்த தொடர் பதிவின் சாராம்சம்.எனக்கு சிறுகதை எல்லாம் எழுத வராது.எனவே என் ஸ்டைலில் ஒரு பதிவு எழுதி அதுக்கு பொருத்தமான பாடல்களை இணைக்கின்றேன் என்னை தொடர் பதிவுக்கு அழைத்த ஆமினா அக்காவுக்கு நன்றி.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)


Tuesday, December 20, 2011

புரியாத மொழி பேசிய பெண்ணுடன் ஒரு நாள்

சில நாட்களுக்கு முன்பு என் நண்பன் ஒருவன் தான் வேலையில் நிற்பதாகவும் ஒரு ரயில் டிக்கெட் புக் செய்து தரும் படி கேட்டுக்கொண்டான்.அதன் படி நானும் ரயில் டிக்கெட் முற்பதிவு செய்ய போயிருந்தேன்.அங்கே சகோதர மொழியைச்சேர்ந்த டிக்கெட் வழங்குனர் ஒருவர் டிக்கெட்டுக்களை வழங்கிக்கொண்டு இருந்தார்.

Monday, December 19, 2011

நான் ரசித்த சச்சின் டெண்டுல்கரின் சில புகைப்படங்கள்

எனக்கு சச்சினை பெரிதாக பிடிப்பது இல்லை அதற்காக அவரை விமர்சிப்பவனும் இல்லை.ஒரு கிரிக்கெட் ரசிகனாக அவர் மேல் மிகுந்த மரியாதை இருக்கின்றது.இந்தப்பதிவில் நான் ரசித்த சச்சினின் சில புகைப்படங்களை தொகுத்து தந்துள்ளேன்.

Thursday, December 15, 2011

விஜய்-அஜித்-யார் படம் பெஸ்ட் ஒரு பார்வை( தொடர் பதிவு)

அகசியம் வலைப்பதிவின் ஓனர் வரோ அண்ணன் அவர்கள் ஒரு தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருந்தார். அதாவது அஜித்,விஜய் நடித்த படங்களில் மிகவும் கவர்ந்த அஜித் படம் ஒன்றை பற்றியும் விஜய் படம் ஒன்றைப்பற்றியும் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார். நான் கிட்டதட்ட விஜய்,அஜித் நடித்த எல்லாப்படங்களும் பார்த்திருக்கின்றேன் அதில் சிறந்த ஒன்றை தேர்வு செய்து எழுதுவது கடினம் ஆனாலும் இன்றுவரை இருவரின் படங்களில் மனசில் நிற்கும் இரண்டு படங்களை பற்றி எழுதுகின்றேன்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுத்த பதிவு(www.nanparkal.com)

Tuesday, December 13, 2011

தனிமையில் இனிமை காண முடியுமா?

என் தனிமையின் சோகங்கள்,சந்தோசங்களை கொட்டும் இடம் தான் எனது இந்த நண்பர்கள் வலைப்பதிவு.நான் வலைப்பதிவு எழுத வந்த போது என் நண்பர்கள் யாரும் அதை ஊக்குவிக்கவில்லை ஏன் உனக்கெல்லாம் இந்த வேலை என்று தூற்றினார்கள் இப்ப கூட என் நண்பர்கள் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் இது எல்லாம் ஒரு வேலையா பிரயோசனமாக எதையாவது செய் என்கின்றார்கள்

Monday, December 12, 2011

சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டால் சின்னக்குழந்தையும் சொல்லும் ரஜனிகாந் என்று

இன்று(December-12) சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் அவர்களின் 62வது பிறந்த நாளாகும்.அவருக்கு நண்பர்கள் தளம் சார்பாகவும் அதன் வாசகர்கள் சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

Friday, December 09, 2011

வீரேந்தர் சேவாக் ஒரு மாஸ்-என்னைக்கவர்ந்த பிரபலங்கள்

இன்றைய என்னைக்கவர்ந்த பிரபலங்கள் என்ற இந்த பகுதியில் இந்தவாரம் ஒரு சினிமாப்பிரபலம் பற்றி எழுதலாம் என்றுதான் இருந்தேன் ஆனால் நேற்றி இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதய கேப்டனும் அதிரடி நாயகனுமான வீரேந்தர் சேவாக் ஒரு நாள் போட்டிகளில் புதிய வரலாறு படைத்தார் எனவே என்னை மிகவும் கவர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் சேவாக் பற்றி அவரின் சாதனை பற்றி பேசுவோம்

Thursday, December 08, 2011

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா…அன்பே


என் உயிரில் ஓடிவரும் ஓசை நீ தான்
உன் அன்பை நாடிவரும் ஜீவன் தான்
என் முகத்தில் தாடி வரும் காரணம் நீதான்
ஆனால் நீ மட்டும் உன் டாடியை அனுப்பி
என்னை தேடி வர சொல்லாதே என் லேடி
அப்பறம் நான் ஓடிவிடுவேன் ஓடி

Tuesday, December 06, 2011

வயது அதிகமான பொண்ணுங்களை காதலிப்பது தப்பா?

வணக்கம் நண்பர்களே ரசனை என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும் எங்களைவிட வயசு அதிகமான பொண்ணுங்களை காதலிப்பது தவறா?ஏன் பொதுவாக வயசு குறைந்த பொண்ணுங்களைத்தானே ஆண்கள் திருமணம் செய்கின்றார்கள் அப்ப பெண்ணைவிட ஆணுக்கு வயது அதிகம் இருக்கும் போது ஏன் பெண்கள் மட்டும் வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்யக்கூடாது?

Monday, December 05, 2011

மாத்தியோசி:நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம் அதை ஏன் விமர்சிக்கவேண்டும்?

பதிவர் அகசியம் வலைப்பதிவின் ஓனர் வரோ அண்ணன் ஆரம்பித்த பதிவர்களுக்கிடையில் நட்புறவை மேலும் மேம்படுத்த மாத்தியோசி என்னும் தலைப்பில் ஒரு பதிவரின் தளத்தின் இன்னும் ஒரு பதிவர் ஒரு பதிவெழுதுதல் என்ற செயற்திட்டத்தில் வரோ அண்ணரின் கோரிக்கைக்கு இனங்க நான்,துஷி,மதுரன்,ஆமினா அக்கா,ஆகியோர் இதை ஏற்றுக்கொண்டு பதிவு எழுதினோம் அந்த வகையில் வரோ அண்ணனின் தளத்தில் ஆமினா அக்கா பதிவு ஒன்று எழுதினார்.மதுரனின் தளத்தில் நான் ஒரு பதிவு எழுதினேன் துஷியின் தளத்தில் வரோ அண்ணன் ஒரு பதிவு எழுதினார் அந்த வகையில் இன்று என் தளத்தில் துஷியின் பதிவு பிரசுரமாகின்றது....

Friday, December 02, 2011

என்னைக் கவர்ந்த பிரபலங்கள் இந்தவாரம் ஒரு தேசத்தின் சூரியன் யார் அவர்?

பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் நிகரில்லா தலைவர் என்னை மிகவும் கவர்ந்த ஒரு தலைவர்.கியூபாவின் விடுதலைப்போராளி ரியல் ஹீரோ.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails